இந்தியா, மே 4 -- நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிடக் கூடாது என்றும், அஜித்குமாருக்கு தனது வாழ்த்துகள் என்றும் நடிகர் சசிகுமார் கூறினார்.

திருப்பூரில் நடிகர் சசிகுமார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் குறித்த புரொமோஷன் செய்வதற்காக தியேட்டர் விசிட் அடித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சசிகுமார், ' எல்லார் வீட்லயும் எல்லோருக்கும் ஃபேமிலி சப்ஜெக்ட் பிடிக்கும். இயக்குநர் கதையை எடுத்துட்டு வரும்போது, இந்த மாதிரி படம் பண்ணனும்னு தோணுச்சு. ஏனென்றால், பெண்கள் தியேட்டருக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு.

அவங்கதான் படங்களை சினிமாவில் ஓடவைச்சவங்க. ஓடிடி வந்ததுல இருந்து அவங்க தியேட்டருக்கே வந்தது இல்ல. இப்ப பார்க்கும்போது இவ்வளவு கூட்டம் வராங்க. இவ்வளவு பேர் வராங்கன்னு நினைக்கும்போது, நல்ல சினிமா கொடுத்தோம்னா அவங்களுக்கான சினிமா கொடுக்கும்போது கண்டிப்ப...