இந்தியா, ஜூன் 11 -- ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன்பின் மேடையில் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு முதல் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஆரம்பித்தோம்.

ஐந்து வேளாண்மை பட்ஜெட் மூலம் தனிக்கவனம் செலுத்தியதால், உண்டாகியிருக்கும் பயன்களை, சில எடுத்துக்காட்டுக்களை சொல்லணும் என்றால், கடந்த 4 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில், 458 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டியிருக்கிறோம்.

2021ஆம் ஆண்டில், ஹெக்டருக்கு 2 ஆயிரத்து 235 கிலோவாக இருந்த, உணவு தானியப்பயிர்களின் உற்பத்தித்திறன் 2024-25ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 871 கிலோவாக அதிகரிச்சிருக்கு.

அதுமட்டுமில்ல. கூட்டுறவுத்துறை மூலம், 62 ஆயிரத்து 352 கோடி ரூபாய் பயிர்க்கடன் மற்றும் க...