சென்னை,சேலம், மே 8 -- ''தூத்துக்குடி தூப்பாக்கிச் சூட்டைத் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்ட பழனிசாமியின் அடிமை ஆட்சி அல்ல இது! சட்டம் ஒழுங்கைச் சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை,'' என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை! ரூ.10,160.63 கோடியில் 662 கோடி முறை பயணம் பெண்கள் விடியல் பயணம்! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.721 கோடி வழங்கப்பட்டு 4,83,000 கல்லூரி மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்!

மேலும் படிக்க | 'உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்' முதல்வர் ஸ்டாலின் வாழ்த...