இந்தியா, மார்ச் 22 -- மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் 12 தொகுதிகளை தமிழ்நாடு இழக்க நேரிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தொடங்கி உள்ளது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.

இந்த போராட்டம் மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; நியமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாடு 8 இடங்களை இழக்கும். நாடாளுமன்ற மொத்த இடங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் 12 இடங்களை இழக்...