இந்தியா, மே 4 -- தேமுதிக ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஒதுக்கப்படும் என்று அதிமுக உறுதியளித்தது உண்மைதான் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நேரம் வரும்போது மேலும் பேசுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:- BJP PMK Alliance: பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜ்யசபா சீட் கிடைப்பது சந்தேகம்?

தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இபிஎஸ் கூறி இருந்த நிலையில், எல்.கே.சுதீஷின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக-தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது நடந்த பேச்சுவார்த்தைகளில், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று வாய்...