சென்னை, மே 9 -- தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒரு கொள்கையின் அமலாக்கத்தின் காரணமாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்று கூறியது. மேலும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மாநிலங்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்தது.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் அரசியல் சாசனப்படி கடமைப்பட்டுள்ளன என்று கூறி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்தார். மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்த கொள்கை எதிர்க்கப்படுவதாகவும், மாணவர்கள் இந்தி கற்க வேண்டும் என்ற...