இந்தியா, ஜூலை 4 -- திருப்போரூர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிப்பிற்கு எதிராக ஜூலை 9 ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திருப்போரூர் தொகுதியில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய, நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து, ஜூலை 9, 2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில் ...