இந்தியா, மே 10 -- பிரபல இயக்குநர் பிரேமிற்கு நடிகர் சூர்யா தார் காரை பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார். இது குறித்து பிரேம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ' மகேந்திரா தார் காரானது என்னுடைய கனவு கார். ஆனால், சில காரணங்களால் நான் 5 கதவுகள் கொண்ட மகேந்திரா காருக்காக காத்திருந்தேன்.

குறிப்பிற்காக நான் ROXX AX 5L 4*4 வெள்ளை நிற காரிற்காக நான் காத்திருந்தேன். அந்தக்கார் இறங்கிய உடன் நான் அதனை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு பணத்தை சேமித்து வாங்குவதற்கு தயார் ஆனேன். ஆனால், நான் காத்திருக்க வேண்டிய காலம் நீண்டு கொண்டே சென்றது.

அதனை தொடர்ந்து நான் தயாரிப்பாளர் ராஜா சாரிடம் உதவி கோரினேன். அவர் என்னுடைய ஆசையை புரிந்து கொண்டு கடுமையான பணி நெருக்கடிகளுக...