இந்தியா, ஜூன் 14 -- தமிழர்களின் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடுகள் நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

வரவிருக்கும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி (NTK) தனித்துப் போட்டியிடும் என்பதை அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையும் மாற்றுவதே தனது நோக்கமும் கனவும் என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்து களத்தில் பணியாற்றி வருகிறது.

கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், "கூட்டணி என்பது கிடையாது" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் தனது மக்களை நம்பி, மக்களுக்காக, மக்களோடு நின்று போராடுவோம் என்று கூறினார். தீமையை வைத்து மற்றொரு தீமையை ஒழிக்க முட...