சென்னை,கோவை,கரூர், மார்ச் 22 -- நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. தமிழக உரிமைகளுக்கு இது போன்ற முயற்சிகளை எடுக்காத திமுக அரசை கண்டித்து, தமிழக பாஜக சார்பில், கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க | Delimitation: 'சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழப்போம்' கூட்டுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

அதன் படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடந்தது. வீடுகளுக்கு முன் கருப்பு கொடிகளை ஏந்தி, பாஜகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில வீதிகளில் வந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த போராட்டம் குற...