இந்தியா, மே 24 -- 16 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதாக வானிலை மைய இயக்குநர் அமுதா அறிவித்து உள்ளார்.

வானிலை மைய இயக்குநர் அமுதா தனது செய்தியாளர் சந்திப்பில், "தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 அன்று துவங்கும். ஆனால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மே 24 அன்று துவங்கி உள்ளது. இதற்கு முன் 2009 ஆம் ஆண்டு மே 23 அன்று முன்கூட்டியே துவங்கியது," என்று அறிவித்தார். மேலும், "தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளையும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளையும் பாதிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. இது ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே கரையை கடக்கும்," என்று கூறினார்.

மேலும் படிக்க:- தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க ம...