இந்தியா, ஏப்ரல் 3 -- பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் தன் மீது கூறிய நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள், நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்வேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதிபடத் தெரிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக அனுராக் தாக்கூர் தன் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் தனது நற்பெயரை சேதப்படுத்துகின்றன என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மக்களவையில் வக்ஃபு மசோதாவை எதிர்த்த காங்கிரஸ் மீது பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் புதன்கிழமை கடுமையான தாக்குதல் பேச்சினைத் தொடர்ந்தார். முன்மொழியப்பட்ட வக்ஃபு வாரியத் திருத்தச்சட்டம், காங்கிரஸின் "திருப்திப்படுத்தும் அரசியல்'' என்ற சவப்பெட்டியில் கடைசி ஆணியாக இருக்கும் என்று அனுராக் தாக்கூர் எம்.பி. கூறினார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவ...