இந்தியா, மே 24 -- வைரலாகப் பரவும் நடிகை கிரண் ரத்தோரின் மார்ஃபிங் வீடியோவுக்கு எதிராகப் புகார்: மார்ஃபிங் மூலம் தனது போலி ஆபாச வீடியோ தயாரித்து பரப்பிவருவதாக சைபர் கிரைம் காவல் துறையில் நடிகை கிரண் புகார் அளித்துள்ளார். மேலும், தனது போலி ஆபாச வீடியோவை ஷேர் மற்றும் டவுன்லோடு செய்தால் சட்டப்படி குற்றம் எனவும் எச்சரிக்கை விடுத்தார், கிரண்.

ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை கிரண். அதன்பின், இவர் வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், வின்னர், தென்னவன் ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர்.

சமீபத்தில் சரியான வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை கிரண் என்கிற கிரண் ரத்தோர், தனது சோசியல் மீடியா பக்கங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கிறார். குறிப்பாக, அவரது படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சியாக இருப்பதால், இளைஞர்கள் மத்தி...