இந்தியா, ஜூன் 1 -- "டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" என திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாக திமுக ஆட்சியைத் தக்கவைக்க வியூகம் வகுப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின், திமுகவின் பாரம்பரியம், தொண்டர்களின் பங்கு, கூட்டணியின் வலிமை மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஸ்டாலின் பேசுகையில், திமுகவின் கருப்பு-சிவப்பு கொடியை தான் பல ஊர்களில் ஏற்றியதாகவும், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பாரம்பரியம் திமுகவின் உயிராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். "தமிழ்நாட்டில் அத்தனை ஊர்களிலும் கொடி ஏற்றிய கை, இந்த ஸ்டாலினின் ...