இந்தியா, மே 18 -- டாஸ்மாக் நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்று உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- 'கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!' திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

திருச்சியில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய கிருஷ்ணசாமி, காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு அமைப்புக்கு பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மற்ற அரசியல் கட்சிகளுக்கு அனுமதி மறுப்பது நியாயமற்றது என்று அவர் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சியில் மீண்டும் பேரணி நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

18% இட ஒதுக்கீட்டில் 76 சாதிகள் அடங்கியுள்ள நிலையில், 3% உள் ஒதுக...