இந்தியா, பிப்ரவரி 21 -- சிம்ரன் பேட்டி: நடிகை சிம்ரன் நவம்பர் 14ஆம் தேதி, 2015ஆம் ஆண்டு பாஸ்கி டிவிக்காக, ஏ டியூப் என்னும் யூட்யூப் சேனலுக்காக தொகுப்பாளர் பாஸ்கியிடம் பேட்டி கொடுத்து இருந்தார். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடிகை சிம்ரன் அளித்த பேட்டியில், ஜோதிகாவுடனான நட்பு பற்றியும், அஜித்துடன் நடித்தது பற்றியும், சில முக்கிய கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தார்.

வாலியில் நடித்தது நன்றாக இருந்தது. எனக்கும் அஜித்துக்கும் எஸ்.ஜே.சூர்யா கதையைச் சொல்லிக்கொடுப்பார். அஜித் நடிக்கும்போது நான் எப்படி நடிக்கணும்னு எஸ்.ஜே. சூர்யா சொல்லிக்கொடுப்பார். அது நான்கிடையாது. அது எஸ்.ஜே.சூர்யா சொல்லிக்கொடுத்ததை நடித்தது தான்.

பஞ்ச தந்திரம் கேரக்டரில் நான் நடிச்சது முழுக்க முழுக்க கே.எஸ்.ரவிக்குமார் சொல்லிக்கொடுத்தது தான். பம்மல்....