இந்தியா, மே 29 -- வரும் ஜூன் மாத இறுதிக்குள் பூத் கமிட்டிக்களை அமைத்து முடித்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 2 நாட்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இன்றைய தினம் நடைபெற்ற முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில், புதுக்கோட்டை (வடக்கு, தெற்கு), மதுரை (மாநகர், புறநகர், கிழக்கு, மேற்கு), தேனி (கிழக்கு, மேற்கு), திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு), விருதுநகர் (கிழக்கு, மேற்கு), சிவகங்கை, இராமநாதபுரம், த...