இந்தியா, மே 31 -- பதவிக்காக மாநில உரிமையை அடகு வைக்க மாட்டோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? முல்லைப் பெரியாறு,காவிரி,பாலாறு, கட்சித்தீவு போன்ற ஜீவாதாரபிரச்சனைகளுக்கு தொடர்ந்து வாய்மூடி மௌனமாய் இருப்பது ஏன் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாளை கூடும் திமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்து அதில் ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைக்க மாட்டோம் என்று அவர் எழுதி உள்ளார். முல்லைப் பெரியாறு நம்முடைய மாநில உரிமை என உச்சநீதிமன்றத்தில் ஒரு தொடர் சட்ட போராட்டத்தை புரட்சித்தலைவி அம்மா நடத்தி அணையை 142 அடியாக தேக்கி கொள்ளலாம், பேபி அணியை சீர் செய்த பின்பு 152 அடியாக தேக்கிகொள்ளலாம் என மாநில உரிமையை பெற்று தந்தார் இந்த நான்காண்டுகளில் அவர் செய...