இந்தியா, மே 1 -- அஜித்குமார் இன்று தன்னுடைய 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டும், அவர் பத்மபூஷண் விருது வாங்கியதையொட்டியும் இந்தியா டுடே சேனல் அஜித்தை நேர்காணல் செய்தது. அதில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் நிருபர் திரைத்துறையில் உங்கள் சக நண்பர்கள் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

மேலும் படிக்க | இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அஜித்திற்கு முதல் அரசியல் தலைவராக ஈபிஎஸ் வாழ்த்து!

அதற்கு பதிலளித்த அஜித் , 'பர்சனலாக எனக்கு அரசியலில் பெரிய ஆர்வம் கிடையாது. என்னுடைய சக நண்பர்கள் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. அவர்கள் நன்றாக வர என்னுடைய வாழ்த்துகள். அது அவர்களின் நம்பிக்கை. ஜனநாயகம் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், மக்கள்தான் இறுதிய...