இந்தியா, மே 28 -- மெய்யழகன் திரைப்படத்தின் இயக்குநர் சி.பிரேம் குமாருக்கு, அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம், விருது கொடுத்தது. அதன் விழாமேடையில் அப்படத்தின் இயக்குநர் பிரேம் குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் பதில் அளித்திருக்கிறார். அதன் தொகுப்பினைக் காணலாம். இந்த வீடியோ மார்ச் 28ஆம் தேதி, பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலில் வெளியானது.

ரியல் மெய்யழகன் உங்களுக்காக வந்திருக்காங்க?

ரியல் மெய்யழகனை அறிமுகப்படுத்த வேண்டியது என் கடமை. மெய்யழகன் ஒருத்தர் இருக்கமுடியுமான்னு சந்தேகத்தை ஆச்சரியத்தில் கேட்டாங்க. சாட்சி இவங்க இரண்டு பேர் தான். மருது பாண்டி வந்து, ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் என் கூட படிச்சவர். நெருங்கிய நண்பர். அசுரவதம் படத்தின் இயக்குநர். நான் பார்த்து ஆச்சரியப்படுத்தக்கூடிய எழுத்தாளர். முத்து அண்ணன், என் குடும்பத்தில் ஒருத்தர்னு...