இந்தியா, மே 9 -- இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என ஆணையர் அருண் உறுதியளித்து உள்ளார்.

சென்னை மாநகரில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், திரையரங்குகள், கோயில்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனைகளும் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைந்தது!' மே 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

காவல் மாநகர ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் உள்ள முக்...