இந்தியா, மார்ச் 21 -- சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய 350 கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என மேயர் பிரியா குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் மொத்த வரவு ரூ.8,267.17 கோடியாகவும், மொத்த செலவு ரூ.8,404.7 கோடியாகவும் இது மதிப்பிடப்பட்டு உள்ளது. இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட் ஆகும், அதாவது செலவு வரவை விட அதிகமாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிதி உதவி எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மீதான விவாதம் இன்று மாமன்றக் கூட்டத்தில் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், "சொத்து வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்திய பின்பும் கூட சென்னை மாநகராட்சி சார்பில் பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் நிதி மேலாண்மையில் தோல்வி ஏற்பட்டு உள்ளது" என்றும் விமர்சித்தார்.

இ...