இந்தியா, மே 2 -- சாதி பெயரை சொல்லி குடிநீரில் மனிதக் கழிவை கலப்பது இந்த தமிழ்நாட்டில் தான். சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றினு தி.மு.க எப்படி சொல்லலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' சாதி வாரி கணக்கெடுப்பு விஷயத்தில் திமுக வெற்றி தேடுதா? சமத்துவம்ன்னு சொன்னாங்க.

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும்போதே கொண்டு வருவோம் என்று சொன்னோம். தவறு ஒன்றும் இல்லை. பலபேர் கேட்டிருக்காங்க. முதன்மை ஒப்புதல் மத்திய அமைச்சரவையில் கொடுத்திருக்கு. ஆனால், அது எங்களுடைய வெற்றி அப்படின்னு சொன்னால், சாதியைப் பற்றி திமுகவில் பேசக்கூடாதே.

அதனால் எல்லாத்திலும் அரசியல் ரீதியாக லாபத்தைத்தேட முயற்சி பண்ணக்கூடாது. தமிழ்நாட...