இந்தியா, ஜூன் 23 -- நமது குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

இந்து முன்னணி ஏற்பாடு செய்த முருகன் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். மூத்த உறுப்பினர்கள், ஆன்மீகவாதிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,"நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இந்த மண்ணில் இந்து மதத்திற்காக உயிர் தியாகம் செய்த தானுலிங்க நாடார், ராமகோபாலன், ராஜகோபால், ஆடிட்டர் ரமேஷ், சசிகுமார் உள்ளிட்ட தலைவர்களின் கண்ணீர் துளிகள் இந்த மாநாட்டில் பிரதிபலிக்கின்றன," என்று அண்ண...