இந்தியா, ஜூன் 8 -- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரப்பிரசாதம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவினர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளித்தார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மேம்படுத்திய பணிகளையும் அவர் விவரித்தார். மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நடைபெற்ற குடமுழுக்கு மற்றும் நிலமீட்பு பணிகள் குறித்தும் பேசினார்.

அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கம் பேர...