விருதுநகர்,மதுரை,சோழவந்தான், ஏப்ரல் 1 -- கிருதுமால் நதியைப் பாதுகாக்கும் விதமாக, மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளிப்பள்ளம் அருகில் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதிக்கும், நிலையூர் கம்பிக்குடி கால்வாய்க்கும் தண்ணீர் திறந்து விடப்படும் தடுப்பணையில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன் தலைமையில் நிர்வாகிகள் கள ஆய்வு செய்தனர்.

" வேகமாதலின் வேகவதி என்றும்

மாகம் வாய்ந்ததனால் வையை என்றும்தார்

ஆகலால் கிருதுமாலையதாம் என்றும்

நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ"-

என்று கூடலழகர் அணிந்த மாலை என போற்றப்படுகிறது.

தடுப்பணையில் ஆய்வு செய்த விவசாயிகள் கூட்டமைப்பினர்

வைகை யின் கிளை ஆறான கிருதுமால் நதி துவரிமான் கண்மாயில் இருந்து துவங்கி 86 கிலோமீட்டர் தூரம் மதுரை சிவகங்கை விருதுநகர் இராமநாதபு...