இந்தியா, மே 18 -- பாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது என்றும், "போர் முறிவு தொடர்வதற்கு" காலாவதி தேதி எதுவும் இல்லை என்றும் இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இன்று இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"டிஜிஎம்ஓ பேச்சுவார்த்தை எதுவும் இன்று திட்டமிடப்படவில்லை. மே 12 ஆம் தேதி டிஜிஎம்ஓவின் உரையாடலில் முடிவு செய்யப்பட்டபடி போர் முறிவைத் தொடர்வதைப் பொருத்தவரை, அதற்கு காலாவதி தேதி எதுவும் இல்லை" என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவும் பாக்கிஸ்தானும் நான்கு நாட்கள் தீவிர எல்லை தாண்டிய மோதல்களைத் தொடர்ந்து நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து மோதல்களையும் உடனட...