கோவை,கோயம்புத்தூர்,சென்னை, மார்ச் 30 -- கோவை விமான நிலையத்தில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது மக்கள் தான் எனவும், கருத்துக்கணிப்பு சொல்வதை வைத்து அதனை தீர்மானிக்க முடியாது,' என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

''விஜய் ஒரு முன்னணி நட்சத்திரம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பலரும் ஜெயித்துள்ளார்கள், பலரும் தோற்றுள்ளார்கள். அதனை தேர்தல் களம் தான் முடிவு செய்யும். சினிமா நட்சத்திரம் என்பதால் அதிகம் கூட்டம் கூடும், ஆனால் அதனை வைத்து நாம் முடிவை கூற முடியாது.

மேலும் படிக்க | 'மனநிலையை மாற்றியுள்ள இஸ்லாமியர்களிடம் எடுத்துக் கூறுங்கள்' உலமாக்களிடம் செந்தில் பாலாஜ...