இந்தியா, ஏப்ரல் 4 -- கயல் சீரியலினால் என் வாழ்க்கையே போயிடுச்சு என்று கயல் சீரியலில் கயலின் அண்ணன் மூர்த்தியாக நடிக்கும் நடிகர் ஐயப்பனின் மனைவி சீரியல் குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சன் தொலைக்காட்சியில் இரவு ஒளிபரப்பாகி வரும் பிரபல நெடுந்தொடர், கயல். இந்த சீரியலில் மூர்த்தி என்னும் கேரக்டரில் நடித்து வருபவர், நடிகர் ஐயப்பன். இந்த சீரியல் சென்னை வளவசரவாக்கத்தில் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது நடிகர் ஐயப்பனின் மனைவி, கயல் சீரியல் நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு, சூட்டிங் நடத்தும் நிர்வாகத்திடம் தனது கணவரிடம் பேசவேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது இந்த கயல் சீரியலால் தன் கணவர் பல்வேறு போதைப்பொருட்களைப் பயன்படுத்திக்கொண்டு வீட்டுக்கு வந்து ஆபாசமாகப் பேசுவதாகவும்; இந்த கயல் சீரியலால் தன் வாழ்க்கையே ச...