இந்தியா, மே 17 -- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் தெய்வசெயல் மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகக் கல்லூரி மாணவி ஒருவர் பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். தனது புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பதாகக் கூறி, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.

மேலும் படிக்க:- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

21 வயதாகும் பாதிக்கப்பட்ட மாணவி, அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல் (40) தன்னை காதலிப்பதாக ஏமாற்றி, ஏற்கனவே திருமணமாகியும் கடந்த ஜனவரி 31 அன்று சோளிங்கர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகத் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ...