இந்தியா, ஏப்ரல் 8 -- சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் மாதம் சோதனை செய்தனர். அந்த சோதனையில் டாஸ்மாக் டெண்டர் மூலமாக ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, '' இந்த டாஸ்மாக் ஊழலில் டாஸ்மாக் நிறுவனம், சாராய ஆலைகள், பாட்டில் ஆலை ஆகிய மூன்று நிறுவனங்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் பாட்டிலில் கூடுதலாக விலை வைத்து விற்றல், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் எந்த ஆலைக்கு ஒப்பந்தம் கொடுக்கவேண்டும் என்பதில் நடந்த ஊழல், எந்த பாட்டிலை வாங்கவேண்டும் என்பதில் நடந்த ஊழல்'' அதனைப் பட்டியலிட்டு பேசினார்.

அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, டிஸ்டில்லரி நிறுவனங்கள் மற்றும் பா...