இந்தியா, மே 16 -- ஒரே தேர்வு மையத்தில் 167 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றது தொடர்பாக எழுந்த குற்றசாட்டுக்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுத்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் +2 வேதியியல் பாடத்தில் 167 பேர் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்த விவகாரம் பேசுபொருள் ஆகியது. அண்மையில் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வேதியியல் பாடத்தில் மட்டும் 3,181 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று இருந்தனர். இதில் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வேதியியலில் அதிகம் பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தது விவாதப்பொருள் ஆனது.

மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: '10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை...