இந்தியா, மே 3 -- கஜானா இசை வெளியீட்டு விழா மேடையை, நடிகை வேதிகாவை பாடவைத்த, நடிகர் கூல் சுரேஷ் கச்சேரி மேடையாக மாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஜானா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடை ஏறிய நடிகர் கூல் சுரேஷ், 'நம்ம வேதிகா அவர்கள் நல்லா டான்ஸ் ஆடுவாங்க. நல்லா நடிப்பாங்க என எல்லாமே தெரியும். நல்லா பாடுவாங்க. இனி ஏ.ஆர்.ரஹ்மான் சார், அனிருத் சார், யுவன் சங்கர் ராஜா சார் அவங்க எல்லாம் வந்து, வேதிகா அவர்களைப் படத்தில் பாட வைக்கணும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என சிரிக்காமல் நக்கலடித்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகை வேதிகா அருகில் இருந்த மைக்கை வாங்கி, 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்'' என பாடிக்காண்பித்தார். இதனால் விழா மேடையே கலகலப்பானது.

மேலும் படிக்க:'நான் கல்லூர...