இந்தியா, மே 19 -- குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்காக இளையராஜா அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்த விவகாரம் குறித்து இளையராஜாவின் சகோதரரும், இயக்குநருமான கங்கை அமரன் குட் பேட் அக்லி படக்குழுவினரை கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.

அதில் அவர், ' நீங்கள் ஏழு கோடி ரூபாய்க்கு ஒரு மியூசிக் டைரக்டரை வைத்திருக்கிறீர்கள். அவன் போட்ட பாட்டிற்கு கைதட்டு வராமல் எங்களது பாட்டிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அதற்கான கூலி எங்களுக்கு வர வேண்டும் அல்லவா..?

எங்களுடைய பெயரை போடாமல் இன்னொரு மியூசிக் டைரக்டருக்கு அவ்வளவு கோடிகள் கொடுத்தும், அவரால் நாங்கள் கொடுத்த இசையை கொண்டு வர முடியவில்லை.' என்று பேசினார்.

ஆனால், இதனை அவரது மகனும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி மறுத்து பேசி, கு...