இந்தியா, ஜூன் 13 -- 2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, என் மூச்சு அடங்கும் வரை தலைவராக தொடர்வேன்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்று இந்த தேர்தலுக்கு பின் தலைவர் பதவியை நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன், ஆனால் அவருடைய செயல்பாடுகளை பார்க்கும் பொழுது என்னுடைய வரைக்கும் அந்த பகுதியை நான் கொடுக்க மாட்டேன்" என்று கூறினார்.

ராமதாஸ் மேலும், "ஒரு நல்ல தந்தையாகவும் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறேன், ஆனால் மாநாட்டிற்கு பின் நடக்கும் செயல்களை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது" என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அவர், "கட்சி ஆரம்பிக்கும் போது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வ...