இந்தியா, ஏப்ரல் 21 -- தகவல் தொழில் நுட்பத் துறைக்கு நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனை தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை" என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், "எனது தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க அரசு முன்வருமா?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர், "நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது, டைடல் மற்றும் நியோ டைடல் பூங்காக்கள் தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன, எங்களிடம் அதிகாரம் இல்லை" என்றார். மேலும், "யாரிடம் நிதியும் அ...