இந்தியா, மே 21 -- மத்திய அரசு சார்பில் நிதி ஆயோக் கூட்டம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பிரதமர் தலைமையில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த கூட்டத்தினை தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்தனர். ஏனெனில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து எடப்படி பழனிசாமி ஒரு எக்ஸ் தள பதிவை போட்டிருந்தார். தற்போது அதற்கு ஸ்டாலினும் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | சந்தானம் படத்தின் கோவி...