இந்தியா, ஜூன் 2 -- எதிர்க்கட்சிகளை கோமாளிகள் என்று அழைப்பது ஆணவத்தின் வெளிப்பாடு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்து உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் எதிர்க்கட்சிகளை "கோமாளிகள்" என்று குறிப்பிட்டதற்கு பதிலடியாக, "கோமாளிகள் என்று சொல்பவர்கள் ஏமாளிகளாகப் போகிறார்கள்" என்று தமிழிசை கூறினார். மேலும், திமுக அரசின் ஆட்சி முறையையும், மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் சுமையையும் கடுமையாக விமர்சித்தார்.

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி பேசிய தமிழிசை, "எதிர்க்கட்சிகளை கோமாளிகள் என்று அழைப்பது ஆணவத்தின் வெளிப்பாடு. ஆளும் கட்சி என்பதால் தங்களை திறமையாளர்களாகவும், எதிர்க்கட்சிகளை கோமாளிகளாகவும் கூறுவது...