இந்தியா, மே 22 -- டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை ஒரே டெம்ப்ளேட்டை பயன்படுத்தி வருவதாக திமுக வழக்கறிஞர் சரவணன் விமர்சித்து உள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) மீதான நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, திமுக வழக்கறிஞர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் அதிகார வரம்பு மீறல் எனவும், இது எதிர்க்கட்சிகளை குறிவைத்து பாஜகவின் அரசியல் நோக்கத்துடன் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க:- துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!...