சென்னை,எட்டயபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி, மே 27 -- எட்டயபுரம் சமஸ்தானம் தொடர்பாக தமிழ்நாடு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான செய்தியை நீக்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42 வது ராஜா சந்திர சைதன்யா, அது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்துள்ளார். மேலும் அது தொடர்பாக, சமஸ்தானம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது:

''வணக்கம், தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும், வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எங்களின் எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், உமறுப் புலவர், இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எங்கள் எட்டயபுரம்.

மேலும் படிக்க...