இந்தியா, மே 22 -- விடியா தி.மு.க-வின் நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் மந்திரி சபையில், மந்திரி என்ற பதவியை மறந்த ரகுபதி என்ற நபர் தன்னிலை மறந்து, நேர்மையின் திருவுருவாகத் திகழும் முன்னாள் முதலமைச்சர் எங்கள் கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடியார் அவர்கள் மீது அறிக்கை என்ற பெயரில் புலம்பி இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்ட வீட்டுக்கு, இரண்டகம் செய்வது போல், வாழ்வளித்த இயக்கத்தையும், அரசியல் அங்கீகாரம் தந்த புரட்சித் தலைவியையும் காட்டிக் கொடுத்து, தீய சக்தி திமுக-வில் தஞ்சமடைந்...