இந்தியா, மே 14 -- பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் ட்விட் பதிவை அடித்து தூக்கியிருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் டவிட் பதிவு.

சமூக வலைதளங்களில் திமுக தான் கிங் என்று சொல்வார்கள். ஆனால், பொள்ளாச்சி வழக்கில் அதிமுகவை மையப்படுத்தி ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டை விட, அதனைக் கண்டு கொதித்து எடப்பாடி வெளியிட்ட மிகக் காட்டமான ட்விட்டுக்கு பொதுமக்களிடம் ஆதரவு பெற்றுள்ளது. அந்த வகையில் பார்த்தால் முதலமைச்சர் ட்விட்டை விட மிக அதிகமாக எடப்பாடி பழனிசாமியின் ட்விட் நெட்டிசன்களால் பகிரப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின் வெளியிட்ட டவிட் பதிவை நேற்றிரவு நிலவரப்படி 4,700 பேர் லைக் செய்திருந்தனர், 2,400 பேர் ரீபோஸ்ட் (மறுபதிவேற்றம்) செய்திருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இ....