இந்தியா, மே 26 -- எடப்பாடி பழனிசாமி என்ற பொக்கிஷத்தை பாதுகாக்க Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது' மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். உதயகுமார், எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும், இதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "புரட்சி தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்...