இந்தியா, மார்ச் 20 -- கொடிக் கம்பங்களை தாமாக அகற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தேனியில் பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு குறித்த கருத்தரங்கு மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. தேனி மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ‌.சண்முகம்...