இந்தியா, மே 18 -- பிரபல நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, மணிரத்னத்துடனான காதல் தருணங்கள் குறித்து இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, 'எனக்கும் மணிரத்தினத்திற்கும் சரியான புரிதல் இருப்பது இசையில்தான். ஆம், இசைதான் எங்களை இணைக்கும் முக்கியமான விஷயம். கூட்டத்தில் எனக்கு பிடித்த ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கிறது என்றால், மணிரத்னம் என்னை தேடி கண்டுபிடித்து நான் உனக்கு பிடித்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தலையை ஆட்டுவார்.

அதேபோல, அவருக்கு பிடித்த பாடல் ஒலித்தது என்றால், நானும் அவரை தேடிப்பிடித்து உங்களுக்கு பிடித்த பாடலை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவேன். அது எங்களுக்குள் மிக அழகான ஒரு மொமெண்டாக இருக்கும்.

மணிரத்னம் எல்லா விஷயத்தையும் மிக...