இந்தியா, ஜூன் 9 -- "உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியல் ஆதாயத்திற்காக மதவாத பிளவைத் தூண்டுகிறார்" என திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார்.

திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்து, அவரது பேச்சு மாநிலத்தில் மதவாத பிளவை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக உள்ளதாக குற்றஞ்சாட்டினார். தமிழ்நாட்டில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

ஆ.ராசா, அமித் ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு இடையிலான உறவை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் விமர்சித்தார். "தமிழ்நாடு ஒரு அமைதி பூங்காவாக இருக்கிறது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக அமித் ஷா கீழ்த்தரமான நடவடிக்கைகளை மே...