இந்தியா, மே 30 -- உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு, சம்பந்தமில்லாதவர்களை ஸ்டாலின் அரசு கைது செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கே உள்ள காவல்துறை உண்மைக் குற்றவாளிகளைப் பிடிப்பது சவாலானது என்றாலும், அதனைச் செவ்வனே செய்கின்றனர். ஆனால் தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், கொலை குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிட்டுவிட்டு, அவசர கதியில் குற்றங்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் போக்கு நிலவுவது கொடுமையின் உச்சம்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் கடத்தல், சிறுமிகள் முதல் மூதாட்டிகள...