இந்தியா, மார்ச் 19 -- சட்டப்பேரவையில் உட்கார்ந்து கொண்டு மிரட்டல் விடுக்க கூடாது என அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி தொடங்கிய 2025 - 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் விவாதம் தொடர்கிறது. நாளைய தினம் வேளாண் பட்ஜெட் மீதான விவாதமும், நாளை மறுநாள் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையும் நடைபெறுகிறது. வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை துறைரீதியான மான...