இந்தியா, மே 17 -- நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்த சமயத்தில் இருந்தே கோலிவுட்டில் அவரது பெயரும் அவரது மனைவியின் குடும்பத்தினர் பெயரும் அடிபட்டு வந்தது. இந்த நிலையில், ஜெயம் ரவி விவாகரத்து பெற்றதுக்கு அவரது மாமியார் தான் காரணம் என பல இடங்களில் வெளிப்படுத்தி வந்தார். அவர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூட அதனை குறிப்பிட்டிருந்தார்.

நிலைமை இப்படி இருக்க, ரவி மோகனின் மாமியாரும் தயாரிப்பாளருமாகிய சுஜாதா விஜயகுமார், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து முதல்முறை விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்...