இந்தியா, மே 20 -- கெனிஷா தன் வாழ்க்கையில் வந்த ஒளி என நடிகர் ரவி மோகன் சமீபத்தில் கூறியிருந்தார். அத்துடன் கெனிஷாவை தவறாக பேசுவதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, கெனிஷாவிற்கும் ரவி மோகனுக்கும் எதிராக கருத்து தெரிவித்து ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படிச் செய்துவிட்டது.

ஒரு முறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவ...